Skip to main content

தீவிட்டி கொள்ளைக்காரர்கள் - பாட்டி சொன்ன கதை

 


தீவிட்டி கொள்ளைக்காரர்கள்

சுக்லபக்க்ஷ  துவிதியை …… நாங்கள் எல்லாரும் மித்ததில சாப்பிடறதுக்கு  கூடினோம்.  மேலே பிறை நிலா கொஞ்சமா தெரிஞ்சுது. அன்னிக்கு Power , Cut ஆகையால் நிலாச் சோறு எங்களுக்குகமலி மாமி பெரிய பாத்திரத்தில குழம்பு சாதம் பிசைந்து கொடுத்தாள்.  “கொஞ்சம் தளர பிசஞ்சு கொடும்மா கமலி”,  குஞ்சு பாட்டி அக்ஞை   ப்ரஸ்தாரிச்சுண்டே கீழே உற்கார்ந்துண்டாகுமுட்டி அடுப்பில உளுந்து   அப்பளம் சுட பட்டுக்கொண்டிருந்தது. புடலங்காய் பொரிச்ச கூட்டும்  இருந்தது  தொட்டுண்டு சாப்பிடநாங்களும் சுத்தி உற்காந்துண்டோம்.   கதை ஆரம்பமானதுஇன்னிக்கு எங்காத்துல சுண்டக்காய் வத்த குழம்பு .  - கொஞ்சம் வெல்லமும்,நல்லெண்ணெய்யும் தூக்கலா இருக்கும்.

எங்க பாட்டி (It is Kunju Paatis'- Paati)குழந்தையா இருக்கறச்ச ... ஏன், நான் குழந்தையா இருந்தப்போவும் ,இந்த மாதிரி “கரண்டு” (Electric Current and lights) விளக்கு கிடையாது.Exact Time line  – Please date this era as 140 Years before 1980 = approx. 1840 A.D),  லாந்தர்(Lantern) விளக்கும் குத்து விளக்கும் தான் வெளிச்சம் தரும். தெருவில் தீவட்டிகள் உபயோகிப்பார்கள்  ( A flambeau / Torch). She remembered almost every incident of her childhood in great detail. She transported all to the bygone era of her Granny “Dharumi” (Dharmaambal) - Here, My Grandpa intruded in a whisper saying - "This event happened Before The Sepoy Mutiny"

Paati, narrated the story to us as follows:

சேம்பரம்(Chidambaram) -கவரப்பட்டு- இது தான் எங்க கிராமம். மூணு போகம் வளையும். கொள்ளிடம் கடலிலே சேரும் இடம். உளுந்து விளையும் , நெல் விளையும்,  காய் கனி  விளையும்எல்லாம் விளையும். ….. பொன் விளையும் பூமி அது. கவரப்பட்டு குளம் எப்போதும் நெறஞ்சு இருக்கும்.எல்லாருமே மிட்டா மிராசுக்கள்  தான். பண்ணையம் பண்ணறவா.ல்லறத்துலேயும், ரெட்டை மாட்டுவண்டி உண்டு. நிறைய பணம் நகை உண்டு .அப்போ எல்லாம் பேங்க (Bank) கிடையாது. அதனால பணம் - நகைகளையும்உசத்தி பொருள்களையும் ஆத்துலேயே வெச்சிண்டிருந்தா.

அப்போதெல்லாம் எல்லா வீட்டிலும் ஒரு ஜன்னலில்லா இருட்டறை உண்டு. அந்த உள்ளில (Room) சுவற்றிலோ , தரையிலோ ஒரு சின்ன இரும்பு பொட்டி  பதிச்சிருக்கும் . அதோட தொரக்கோல் (சாவி), வேற இடத்துல இருக்கும். யாருக்கும் தெரியாது.அந்த உள்ளில தான் பணம் , நகை ,சொத்து பட்டயம்இத்தயாதிகள் வெச்சுப்பா. சில வீடுகளில் பூஜை அறையில் இரும்புப் பெட்டி பாதிச்சிருக்கும்.ஒரு கக்க்ஷம் இல்லேனபேழைல நகைகள் இருக்கும். இதெல்லாம் அந்த பெரிய பெட்டில வெச்ச பூட்டிடுவா. சில உருபிடிகள்அடுக்களை, சாமான உள்ளிலே கூட இருக்கும்.

வக்கீல் வரதராஜ ஐயர் வீட்டில அவருடைய அலுவல்  அறை (Office Room) ஒரு ரகசிய இடம் .வெள்ளைக்காரன் ஆண்ட காலத்துல மதராஸ் மாகாணத்துல பெரிய வக்கீல் அவர். அவருக்கு, பட்டணத்துலயும் ஜாகை உண்டு  நிறைய பணம்அவாத்து பாக்யலட்சுமி கல்யாணத்துக்கு பச்சைக்கல் நகை வகையறா, சிகப்புக்கல் நகை வகையறாவைர நகை வகையறானு நிறைய பண்ணினா . வெள்ளி பாத்திர செட் மதராசுலசெட்டியார் கிட்ட சொல்லி பண்ணிண்டு வந்தார்இதை சொல்லும்போது குஞ்சு பாட்டியின் கண்களில் வைரம் மின்னும். அப்படி ஒரு பரவசம்! Engrossed in that excitementநாங்களும் எச்சா (Extra) ரெண்டு உருண்டை வாங்கி சாப்பிடுவோம்அப்படி ஒரு வர்ணனை திறன், குஞ்சு பாட்டிக்கு.She actually explained every handcrafted piece of jewellery, the craftsmanship and the cultural background, though she has not seen any. Maybe, Her grandmother should have explained here these details!

குஞ்சு பாட்டி கையில் இருந்த உருளியில் சாதம் பூர்த்தியானதை பார்த்து , கமலி மாமி இன்னொரு பாத்திரத்தில் அவசரமா சாதம் பிசைந்துகொண்டு  வந்தாள்உருளிகள் கைமாறின.… கதையும்  தொடர்ந்தது.

அந்தப் காலத்துல தீவட்டிக் கொள்ளைக்காரர்கள் என்ற ஒரு வகைத் திருடர்கள் , நல்ல இருட் காலத்தில் கூட்டமாக வந்து சூறையாடிச் செல்லும் நிகழ்ச்சிஅடிக்கடி நடந்து வந்தது. கொள்ளைக்காரர்கள் பத்துப்பன்னிரண்டு பேர்களாவது இருப்பார்கள். ஒவ்வொருவருவர் கையிலும் ஒரு சிறு தீவட்டியும் இருக்கும். அவா முன்கூட்டியே வரதை பத்தி  ஓலை அனுப்பி சொல்லிடுவா. கிராமவாசிகள் ஒப்புதல் ஓலை அனுப்பிடுவாஅவாஎல்லாம் குதிரை எறிவருவாளாம்கருப்பு துணியால முகமெல்லாம் மூடியிருப்பாளாம்.

கையில் ஓங்கிய அரிவாள். இடுப்பில் பிச்சுவா , சித்தருவா (சிற்றருவாள்)தாம்பக்கயிறு மற்றோர் கையில் பலாக்கம்புசவுக்கு கம்புதோல் சாட்டை ,ஈட்டி, கடப்பாரை, சுத்தி, அறம் இப்படி பல ஆய்தம் ஏந்தி வருவாளாம். Here, Actually She has taught us about a plethora of tools that were in use those days!

கருகருனு ( Here her tongue would make extraordinary vibration while pronouncing the syllable “ரு”) ஆறடி உயரம்வாட்டசாட்டமான உடல்கட்டு போருக்கு தயாரா வரவா  போல வருவாளாம் .  அடிதடி கொலைக்கு அஞ்சமாட்டாஅவா  நம்ம கம்பளத்து நாயக்கர் பேசற பாஷை போல பேசுவாளாம். அநேகமா எல்லோருமே ஆறடி உயரம்வாட்டசாட்டமான உடல்மதயானை போல சரீரம், பலத்த, கனத்த  ஆகிருதியோட இருப்பாளாம்பிடிபடாம இருக்கஉடம்பெல்லாம் விளக்கெண்ணெய் தண்டவிண்டு பளபளனு  இருப்பாளாம். காட்டு வழியில் பயணிப்பதால்பூச்சி கடியிலிருந்து தப்பிக்க வேப்பெண்ணையும் பூசிக்கறது உண்டு.அநேகமா எல்லாரும் நெத்தியில தீர்கமா விபூதி இட்டுண்டிருப்பாளாம்.

கமலி மாமி எடுத்துண்டுபோன உருளியை கழுவிட்டு , பொறுக்கற சூட்டில் குழைவாகொஞ்சம் தளர ரசம் சாதம் பிசஞ்சிண்டு வந்தா. உருளிகள் திரும்பவும்  கைமாறின .கதையும் தொடர்ந்ததுரசம் ஓட ஓட இருக்காது . அள்ளி சாப்பிடற மாதிரி சாதம் இருக்கும். Though she was engaging us with her stories, her ultimate goal was “No Child is left Hungry” and every Child has his/her morsel of food according to their ages.

இந்த கொள்ளைக்காராகூட்டமா வடக்கிலிருந்து வரவானு சொல்லுவா.கோதாவரி,கிருஷ்ணா நதிக்கரையோர  காடுகள்ல  இருக்கறவானு எங்க மங்களம் மாமியாத்து மாமாஐகோர்ட்டு வக்கீல் ( Lawyer in High court) கிருஷ்ணஸ்வாமி ஐயர் சொல்லுவாராம். அவாளுக்கு பரம்பரை தொழிலேகொள்ளைதானாம்.

எங்க கிராமத்து வாசிகள் வம்புசண்டைக்கு போகமாட்டா. ஆகையால் ஓலை வந்த உடனே நெல்மூட்டைஉளுந்து மூட்டைபணம்தங்க காசு , வெள்ளி எல்லாம் எடுத்து வெச்சுடுவாஊர்  பெரியவா எல்லாம் மந்தைல காத்திண்டிருப்பா.அவா  வந்த உடனே பண்டம் கை  மாறும் . பொதி  சுமக்கும் குதிரைகளில் ஏற்றி அனுப்பிடுவா . ஒவ்வொரு ஊருக்கும் வேறே வேறே பொதி  சுமக்கும் கூட்டம் வரும் அவாளோட . இந்த தீவட்டி கொள்ளைக்கார கூட்டம் பொதுவா  மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி மாசங்களிலே தான் வருவாளாம். ( Non Rainy season!) . அதுவும் அம்மாவாசை அன்னிக்கு தான் வருவா.   காட்டிலுள்ள  வழிகள் அவாளுக்கு  கரத்தலை  பாடம். அதனால சரியா  சொன்னபடிக்கு வந்துடுவாளாம். இவாள பார்த்தா வெள்ளைக்காரனுக்கே பயமாம்அவாள(The robbersகண்டா, கண்ட இடத்துல சுடலாம்னு வெள்ளைக்கார துரை  ஆடறு (Order) கொடுத்துட்டானாம்.ஆனா, அவா மட்டும் சிக்கினதே இல்லயாம். அவா குலதெய்வம் அவாள காப்பாத்திண்டே வருமாம்.

அவா(As per the robbers expectation..!) எண்ணம்போல கிராமத்துல இருக்கறவா கொடுத்துட்டா ஒரு பிரச்சனையும் இல்லை. இல்லேன்னா வீடு புகுந்து சூரையாடிடுவா .. ஆடி,  உதை,  குத்து  கூட விழும். அவாளை பொறுத்தமட்டில் , எவனோ பரங்கியான் கொள்ளை அடிக்கும் போது , நாம ஏன்  பண்ணக்கூடாதுனு  தான் எண்ணம். வராதராஜ மாமா, இவாள்ளாம் திருடறதை , மக்கள் கப்பம் கட்டுவது போல பாவித்ததா சொல்லுவா.

கொள்ளைக்காரா  வர அன்னிக்கு ஊர் பெரியவா கொஞ்சம்பேர் பண்ட பாத்திரம்திரவியங்கள்இத்யாதிகளோட  ஊர் மந்தையில் நின்னிடிருப்பா . தெலுங்கு பேச  தெரிஞ்ச வேங்கடசாமி நாயுடு மாமாவும்வெங்கட்ராமண ஐயரும் முன்ன நின்னுப்பா . எதிராஜூலு செட்டியாருக்கு பயம் அதிகம் . தன்னோட கனத்த சரீரத்தை கஷ்டப்பட்டு மறச்சிண்டு பின்னாடியே இருப்பாராம். இதை தவிர வீரண்ண வாண்டையாரும் , காளியப்ப நாயக்கரும் தங்களோட ஆட்களோட  இருப்பாளாம். வக்கீல் மாமாக்கள் வெங்கட்ரமண ஐயருக்கு துணை ஆகமொத்தம்இவாளும்(The villagersஒரு பதினஞ்சு பேரு தான் இருப்பாளாம் .

ராத்திரி ஒரு பத்து மணிக்கு அப்பறமா வருவாளாம் . திடீர்னு ஆறேழு குதிரைகள் முதல்ல வருமாம். அதன் மேலே ஆரோகணிச்சு வரவா கைல தீவட்டி இருக்கும் . அந்த  குதிரைகள் நிறையா புழுதிய கெளப்பிண்டு வருமாம். கொள்ளைக்காரள்ளாம் , தலைப்பா  பின்கொசுவத்தால் மூக்கு, வாய் எல்லாம் சேர்த்து மாறைச்சிருப்பாளாம் . குரல் மட்டும் கணீர்னு   இருக்குமாம். மத்தபடி அவா யாருனே  தெரியாதாம்.

இப்போ குஞ்சுப்பாட்டி எங்களுக்கு தயிர் சாதம் போட்டுடிருந்தா,  மாங்கா தொக்கு தொட்டுக்கறதுக்கு- An exotic combination......தேவாமிருதமா இருக்கும்குழந்தைக்களுக்கு  மோர் மிளகாய் தரமாட்டாசிலசமயம் வடாம் இருக்கும்.

யுத்தியில் கைதேர்ந்த அந்தக் கொள்ளைக் கூட்டத் தலைவன்தெலுங்கில அதட்டலா சிலபல  கேள்விகளை கேப்பானாம். அப்புறம் கொள்ளைக்காரர்களுடைய சங்கேதமான ஒலி ஒன்று, “பண்டம்பாடிகள் தயார்” என்பதற்கு அறிகுறியாகச் ‘சீழ்க்கை’ ( Whistle) ரூபத்தில் சப்தம் எழுப்புவாளாம்இன்னும் நாலைந்து குதிரைகள் வருமாம். அவா கீழே இறங்கி கட்டிவெச்ச மூட்டைகளை தூக்கிண்டு , எல்லோரும் ஒரே சமயத்தில் விருட்டுனு கிளம்பி வந்த திக்குல மறஞ்சிடுவாளாம்என்று சொல்லி முடித்தாள்சாப்பாட்டு கடையும் முடிந்தது. அப்புறம் கிராமத்திலே இத பத்தி யாரும் பேசவே மாட்டாளாம்.

 

Eventually, the populations of robbers and robbery grew vastly after the abolition of Zamindari system and the pro-British upper castes grabbing and owning fertile lands which paved to highly-unequal social formation. The workers were maintained on old feudal methods of giving food, clothing not even fulfilling basic needs. These inequalities lead to a revolution wherein violently charging and earning livelihood by exploiting and robbery became a way of life.

There was also another practice. During the British rule, the kings who lost to the British and freedom fighters who lived in exile received support via these clan of people. Maybe, because of that the people were amiable and paid the people who collected money and food, though they were robbers!


Jai Hind




Comments

Popular and Most Visited Post

பெயர் சூட்டல் - नामकरणम् - A causal talk

  “அம்மா விஷயம் தெரியுமோ? நம்ம சுகவன அண்ணா , கொழுந்தனின் பையன்னுக்கு வரன் அமஞ்ஜியிருக்காம் , பொண்ணு  பேரு அவையாம்பாள்   @ ஸ்வேதா னு சொன்னா” என்று சேதி சொல்லிண்டு உள்ளே வந்தார் ஸ்வாமிநாதன் மாமா.  “பொண்ணாத்துக்கார மயிலாடுதுறையா ?” என்று வினவினாள் லலிதா மாமி சுவாமிநாதனின் அம்மா. “நோக்கு எப்படி மா தெரிஞ்சுது” என்று ஆஸ்ச்சர்யமா கேட்டார் ஸ்வாமிநாதன்.” அம்பாள் பேரு - அழகா கொழந்தைக்கு வெச்சிருக்காளேடா!” என்றாள் லலிதா மாமி. “உனக்கும் கூட நம்ம குலதெய்வம் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி பேருதானேடா வெச்சிருக்கு” , அது தானே வழக்கம் என்றாள். ஸ்வாமிநாதன் சிந்திக்கலானார் . ஆம் , அவர் பார்யாள் பெயர் பர்வதவர்த்தினி @வித்யா . அவா  ராமநாதபுரத்துக்காரா .இப்பொழுது Second generation சென்னைவாசிகள். ஸ்வாமிநாதன் என்னவோ வித்யா மாமியை இன்று வரை “வித்து(विधु).… வித்து(विधु)” என்று இருந்த நாலெழுத்தையும் சுருக்கி செல்லமா கூப்பிட்டு கொண்டிருக்கிறார்!  குளித்து சந்தி பண்ணிவிட்டு இட்லி சாப்பிட உட்கார்ந்தார் ஸ்வாமிநாதன். இந்த லோகமே விரிந்து தட்டையாக்கி விட்டாலும் நம்ம ஸ்வாமிநாதன் மாமா சந்தி பண்ண...

One Nation One Subscription (ONOS) – Ministry of Education, The Government of India

  One Nation One Subscription –   Ministry of Education, The Government of India India has a rich intellectual heritage that spans millennia from as early as 5000 BCE. Ancient knowledge was transmitted orally during numerous subsequent generations so far and only in the recent millennium, the existing knowledge is being archived in written form. The wisdom and knowledge that have emerged on the soil of India is rooted in the Vedas passed through generations. I am on continual interdisciplinary study bridging the ancient wisdom and knowledge to the present technology transformations. My research work is more of study, systematic inquiry and observation of ancient science and literature, in Tamil and Sanskrit and interpreting results in English, which is methodical yet far away from single-factor foci. I have to work on different search interfaces, including physical library visits to search for books, Journals, Interpretations and reference case points. Persistence....

விண்ட அதிரசம்

­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­ வாசலில் கேட் சப்தம் …, அடுத்து  ரேழியில் அரவம்...  “ மாமி …” என்று கூவி கொண்டே ராஜி மாமி ஆஜர ். காலை 11 மணி session இது . The women of every household would meet in a common place to spend time or do some job together. ராஜலக்ஷ்மி @ ராஜி மாமி எங்க தெரு வாசி. அவாகம்  தான் கோடி ஆகம் . அப்புறம் பெரிய தரை கிணறு இருக்கும் . நான் சின்னப்போ , பல நா ள் அங்கே தான் உலகம் முடியறதுனு   நெனச்சிண்டிருந்தேன்! அவ்வளவு பெரிய கிணறு . The street ended there. எங்கப ்பாட்டி ராஜி மாமி வீட்டை தெலுங்காள் ஆகம் னு சொல்லுவா . அவாத்து நிரந்தர வாசகர்கள் - பத்மா மாமி - ராஜி மாமியோட மாமியார்- பத்மா , வெங்கட்ராம ண  ஐயர் – ம ாமனார் , அவரோட அம்மா சீத்தம்மா ( பாட்டி ) , ராஜி மாமி ஆத்துக்காரர் சந்திரசேகரன் , and floating population - அடிக்க டி turn போட்டுக்கொண்டு வந்து போகும் ஆறு நாத்தனார் குடும்பங்கள் - இது தான் ராஜி மாமி ஆகம் . அப்போதெல்லாம் , அநேக ஆகங்களில் நித்ய கல்யாணம் , பச்சைத்தோரணம் தான் . இப்போ ராஜி மாமி   11 ம...