Skip to main content

Gargeyee - சிந்தனைக்கு

  "அடி குட்டி, சித்த வாசலாண்டா பாரு , ராஜா சாப்பிட வந்தானானு, ராவேளை எங்கேயாவது ஊர் சுத்திண்டிருப்பான் , கூப்பிடு அவனை ,” என்றாள் பாட்டி. ஒருபிடி சாதத்ததை எடுத்து மோர் விட்டு அழுத்த பிசையலானாள் ராஜாக்கு சாதம் எடுத்துண்டாச்சு, பத்தை ஒழிச்சு போட்டுடலாம்”, என்று முணுமுணுத்தாள் . அகிலா பத்து ஒழிச்சு தேய்க்கும் காரியத்தில் இறங்கினாள்.

டீ லக்ஷ்மி, ஒன் மன்னி பத்து ஒழுச்சு தேய்க்க உக்காந்துட்டா, நீ புஸ்தகத்தை வெச்சிண்டு உக்காராதே, அடுப்படியை மொழுகி கோலம் போடுஎன்று ஆக்ஞை பிறப்பிதாள். சிமெண்ட் பூசிய தரையானாலும் பசுஞ்சாணத்தால் தான் தினமும் அடுப்படி மெழுகும் வழக்கம் இருந்தது எங்காத்துல. அரிசிமாவு கப்பி கோலமாவா உரு  எடுக்கும் - ultimate reuse of resources. கொஞ்சம் மைதா மாவு கலந்து கோலம் போடுவா. தரையே பளிச்ச்சுன்னு இருக்கும். This will be a stunning combination of a dark mossy green background decorated with beautifully laid interlaced patterns in smoky white.

சரி , நம்ம ராஜாவின் கதைக்கு திரும்புவோம். குழைத்த சாதத்தில் இன்னும் கொஞ்சம்மோர்  விட்டு பிசையலானாள் பாட்டி. எப்பொழுதும் ராஜாவுக்கு மட்டும் மோர் சாதத்திற்கு உப்பும் இல்லை, தொட்டுக்க ஊறுகாயும் இல்லை. மத்யானங்களில் சிலநாள்  குழம்போ , அடி ரசமோ ராஜாக்கு போடுவா.அது ஸ்ரேஷம் (श्रेषम्) தங்காம இருப்பதற்கு வழுச்சு போட்டுட்டு பத்து தேச்சு காமுத்திடுவா. அன்னிக்கு ராத்த்திரி கண்டிப்பா மிளகு குழம்பு சுட்ட அப்பளம் தான் Menu for dinner.

கச்சட்டியை (கல் சட்டி ) குமுட்டி அடுப்பில ஏத்தி குழம்பு பண்ணுவா பாட்டி . நல்லெண்ணெய்யும்  பெருங்காயமும் ஜோடிசேர்ந்து புளி  கரைசல்ல கொதிச்சு  சுண்டும் போது வீடு என்ன.... ஊரே மணக்கும்!  அப்பறம் தொட்டுண்டு சாப்பிட அந்த குமுட்டி தணலில் அப்பளம் சுடும் படலம் அரங்கேறும். சில நாள் மிளகு ரசம் கூட சேர்த்து செய்யுவா பாட்டி.

Again back to Raja - எங்காத்துல , ஸ்ராதத்தன்னிக்கு ராஜாவுக்கு வீட்டு சாப்பாடு கிடையாது. கிருஷ்ணா ராவ் மாமா மெஸ்ல (Mess) இருந்து ஒரு கலந்த சாத பொட்டலம் வரும் . அதே சமயம் பின்னங்காட்டில் ஒதுங்கி இருக்கும் பெண்டிருக்கு Carrier சாப்பாடு வரும். இது ப்ரஹ்மச்சாரியா இருந்த முரளி மாமாவுக்கு assigned duty. அன்னிக்கு ராஜாவுக்கு திண்ணை சாப்பாடும் கிடையாது. வெளிவாசல் வேப்பமரத்தடி திட்டுல வெச்சிடுவா சாதத்தை.அன்னிக்கு அவனுக்கு வீட்டின் உள் எல்லைக்குள்( No entry Into the compound) வர அனுமதி இல்லை.

மற்றப்படி ,ராஜாவுக்கு எப்பொழுதும் ஆத்து வாசல்ல திண்ணையாண்ட சாப்பாடு . அவனுக்கு என்று ஒரு தட்டு உண்டு .
 

ராஜாவுக்கு ஒரு சொகுசும் கிடையாது. கட்டாந்தரையில் தூங்குவது தான் வழக்கம். பாட்டி அவனை வீட்டின் உறுப்பினர் பாவித்தாள். ஆனால் வாசப்படி தாண்டி உள்ளே வர அனுமதி இல்லை . He had Highly restricted and limited movements in our household! Thought he had a father and mother form Rajapalam, he was orphaned at the age of 6 weeks!

பிராரப்தகர்மா, இவனுக்கு தின்னைல போட்டிருக்கு ஜாகை என்று பரிதாபப்பட்டு கொள்வாள், பாட்டிஅப்பா , அவனை பூர்வஜென்ம பந்தம் என்றே கருதினார்.

He was my accompanier to school and my bag was always carried on his back. Thus all of us have a story with interlaced experiences of Raja.

இவ்வளவு பெருமைக்குரிய இந்த ராஜா யார் தெரியுமா? எங்கள் வீட்டில் வளர்ந்த ராஜபாளையம் கோம்பை வகை நாய்! He was actually adopted in a desperate situation.

சுப்ரமணிமயபுரம்ல பக்கத்தாத்து   போலீஸ்  மயிலசாமி மாமா ( that is how we called strangers, irrespective of cast creed, religion, Only age matter to classify as அண்ணா , மாமா or தாத்தா)  , மாற்றலாகி போகும் போது அவர், ஆறு வார குட்டி ராஜாவை விட்டு சென்றார் . அன்றிலிருந்து ராஜாகக்கு எங்காத்துல ஜாகை.

ராஜா ஒரு வேட்டை நாய் , but Pure Vegetarian, “பிராமணா வீட்டு நாய், அடுத்த ஆத்துல  கூட சாப்பிடமாட்டான்என்று தெருவில் நல்ல பெயர் எடுத்தவன். A highly intelligent , sensitive, having a very good olfactory sensation and particularly he was a well mannered dog, though his wild genetics were strong. He never crossed the stipulated  limits. காரணம் இன்றி குறைத்தது கூட இல்லை!

எங்காத்துல தோட்டம் இருந்ததால ராஜா காவலுக்கு வளர்க்கப்பட்டான். அந்த நாளில் பிராமணர்களின் வீடுகளில் பிராணிகள்  வளர்ப்பது அரிது. தேவை இல்லாத பொருட்கள் கூட எதுவுமே அப்போதெல்லாம் வீட்டில் இருந்ததில்லை.

அப்படி நாய் வளர்த்தாலும் அது  வீட்டிற்கு வெளியில் தான் இருக்கும் . அடுத்த தெரு மலேசியா செட்டியார் வீட்டிலேயும் அப்படிதான். அவாத்து ஜிம்மிக்கும் வெளித்திண்ணை வாசம் தான். முத்துராஜு நாயுடு மாமாவாத்து டோனி கு மாட்டுக் கொட்டாய்.கருப்பையா கௌண்டர் வீட்டு பீட்டர் நாயிக்கு வாசல் தென்னைமரத்தடி . But they were treated with respect and the women of the household usually held long conversations with them!

The above events and practices have been written to describe the discipline, customs and people's behavior in a Hindu society in the past years. These good habits and traditions edify society as a whole!

In general, the Hindus have a lifestyle more aligned to ritualistic routine and cultural practices. Cultural practices influence various psychological factors; be it intelligence, well-being, morality, or emotional balances and ethics /behavior, which lead to a very healthy and contented livelihood. We never owned anything that was not needed to lead our daily life. This list included domesticated animals at home!

Comments

Popular and Most Visited Post

பெயர் சூட்டல் - नामकरणम् - A causal talk

  “அம்மா விஷயம் தெரியுமோ? நம்ம சுகவன அண்ணா , கொழுந்தனின் பையன்னுக்கு வரன் அமஞ்ஜியிருக்காம் , பொண்ணு  பேரு அவையாம்பாள்   @ ஸ்வேதா னு சொன்னா” என்று சேதி சொல்லிண்டு உள்ளே வந்தார் ஸ்வாமிநாதன் மாமா.  “பொண்ணாத்துக்கார மயிலாடுதுறையா ?” என்று வினவினாள் லலிதா மாமி சுவாமிநாதனின் அம்மா. “நோக்கு எப்படி மா தெரிஞ்சுது” என்று ஆஸ்ச்சர்யமா கேட்டார் ஸ்வாமிநாதன்.” அம்பாள் பேரு - அழகா கொழந்தைக்கு வெச்சிருக்காளேடா!” என்றாள் லலிதா மாமி. “உனக்கும் கூட நம்ம குலதெய்வம் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி பேருதானேடா வெச்சிருக்கு” , அது தானே வழக்கம் என்றாள். ஸ்வாமிநாதன் சிந்திக்கலானார் . ஆம் , அவர் பார்யாள் பெயர் பர்வதவர்த்தினி @வித்யா . அவா  ராமநாதபுரத்துக்காரா .இப்பொழுது Second generation சென்னைவாசிகள். ஸ்வாமிநாதன் என்னவோ வித்யா மாமியை இன்று வரை “வித்து(विधु).… வித்து(विधु)” என்று இருந்த நாலெழுத்தையும் சுருக்கி செல்லமா கூப்பிட்டு கொண்டிருக்கிறார்!  குளித்து சந்தி பண்ணிவிட்டு இட்லி சாப்பிட உட்கார்ந்தார் ஸ்வாமிநாதன். இந்த லோகமே விரிந்து தட்டையாக்கி விட்டாலும் நம்ம ஸ்வாமிநாதன் மாமா சந்தி பண்ண...

One Nation One Subscription (ONOS) – Ministry of Education, The Government of India

  One Nation One Subscription –   Ministry of Education, The Government of India India has a rich intellectual heritage that spans millennia from as early as 5000 BCE. Ancient knowledge was transmitted orally during numerous subsequent generations so far and only in the recent millennium, the existing knowledge is being archived in written form. The wisdom and knowledge that have emerged on the soil of India is rooted in the Vedas passed through generations. I am on continual interdisciplinary study bridging the ancient wisdom and knowledge to the present technology transformations. My research work is more of study, systematic inquiry and observation of ancient science and literature, in Tamil and Sanskrit and interpreting results in English, which is methodical yet far away from single-factor foci. I have to work on different search interfaces, including physical library visits to search for books, Journals, Interpretations and reference case points. Persistence....

விண்ட அதிரசம்

­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­ வாசலில் கேட் சப்தம் …, அடுத்து  ரேழியில் அரவம்...  “ மாமி …” என்று கூவி கொண்டே ராஜி மாமி ஆஜர ். காலை 11 மணி session இது . The women of every household would meet in a common place to spend time or do some job together. ராஜலக்ஷ்மி @ ராஜி மாமி எங்க தெரு வாசி. அவாகம்  தான் கோடி ஆகம் . அப்புறம் பெரிய தரை கிணறு இருக்கும் . நான் சின்னப்போ , பல நா ள் அங்கே தான் உலகம் முடியறதுனு   நெனச்சிண்டிருந்தேன்! அவ்வளவு பெரிய கிணறு . The street ended there. எங்கப ்பாட்டி ராஜி மாமி வீட்டை தெலுங்காள் ஆகம் னு சொல்லுவா . அவாத்து நிரந்தர வாசகர்கள் - பத்மா மாமி - ராஜி மாமியோட மாமியார்- பத்மா , வெங்கட்ராம ண  ஐயர் – ம ாமனார் , அவரோட அம்மா சீத்தம்மா ( பாட்டி ) , ராஜி மாமி ஆத்துக்காரர் சந்திரசேகரன் , and floating population - அடிக்க டி turn போட்டுக்கொண்டு வந்து போகும் ஆறு நாத்தனார் குடும்பங்கள் - இது தான் ராஜி மாமி ஆகம் . அப்போதெல்லாம் , அநேக ஆகங்களில் நித்ய கல்யாணம் , பச்சைத்தோரணம் தான் . இப்போ ராஜி மாமி   11 ம...